Friday, October 30, 2015

ரூ.110-க்கு துவரம் பருப்பு: மதுரையில் 11 இடங்களில் நாளை முதல் கிடைக்கும்



மதுரையில் ரூ.110-க்கு துவரம் பருப்பு விற்பனை ஞாயிற்றுக்கிழமை (நவ.1) தொடங்க உள்ளதையடுத்து, அதைக் கண்காணிக்க சிறப்புக் குழுவை கூட்டுறவுத் துறை அமைத்துள்ளது.
 தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.110-க்கு விற்பனை செய்யும் திட்டம் கூட்டுறவுத் துறை மூலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படுகிறது.
மதுரையில் திருமலை நாயக்கர் மகால் பகுதி, திருநகர், அழகப்பன் நகர் ஆகிய இடங்களில் உள்ள பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை சிறப்பு அங்காடி, பொன்னகரம் மதுரா கோட்ஸ் பண்டகசாலை சிறப்பு அங்காடி, பழங்காநத்தம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர் பண்டகசாலை சிறப்பு அங்காடி, ரேஸ்கோர்ஸ் பகுதி பண்டகசாலை சிறப்பு அங்காடி, அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை பண்டகசாலை, டிவிஎஸ் பண்டகசாலை, திருமங்கலம் கூட்டுறவு பண்டகசாலை ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
 இதற்கான துவரம் பருப்பு சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு, தற்போது அரைக் கிலோ பாக்கெட்டுகளாகத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரைக் கிலோ பாக்கெட் ரூ.55-க்கு கிடைக்கும்.
 இந்த விற்பனையைக் கண்காணிக்க கூட்டுறவுத் துறை பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர், சார்பதிவாளர்கள் கொண்ட 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் தற்போது பாக்கெட் தயாரிக்கும் பணியில் இருந்தே கண்காணிப்பைத் தொடங்கியுள்ளனர்.



No comments:

Post a Comment