Friday, October 30, 2015

குறைந்த விலை துவரம் பருப்பு நாளை முதல் விற்பனை

 

குறைந்த விலை துவரம் பருப்பு விற்பனை செய்யும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) தொடங்குகிறது. சென்னையில் 48 கடைகள் உள்பட மாநிலத்தில் 91 அங்காடிகளில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது.
 
மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த 5 ஆயிரம் டன் துவரையில், 500 டன்னை தமிழக அரசு பெற்றுள்ளது. 
 9
ஆலைகளில் பருப்பை உடைக்கும் பணி: இறக்குமதி செய்யப்பட்ட முழு துவரையானது, பருப்பாக மாற்ற ஆறு நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. இதை சென்னையில் 9 தனியார் ஆலைகளில் பருப்பாக உடைக்கும் பணிகள் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகின்றன. தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு ஆலையில் மட்டும் சுமார் ஏழு டன் அளவுக்கு மாற்றப்படுகிறது. 
 
இந்த ஆலைகள் 24 மணி நேரமும் இயங்குவதால், 500 டன் துவரையில் பாதிக்கும் மேற்பட்டவை பருப்பாக மாற்றப்பட்டுள்ளன. பின்னர் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்டுகளாக பருப்புகள் போடப்பட்டு வருகின்றன. 
 
குறைந்த விலையில் நாளை முதல் விற்பனை: இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, குறைந்த விலையிலான துவரம் பருப்புத் திட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
 
இது குறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
 
சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் 91 அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 500 டன் துவரையானது, இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், 350 டன் துவரையானது, கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான கடைகளுக்கும், மீதமுள்ள 150 டன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான அங்காடிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
 91
கடைகளில் விற்பனை: சென்னையில் திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் (டி.யு.சி.எஸ்.,) சொந்தமான 12 கடைகளிலும், 36 கூட்டுறவுக் கடைகளிலும் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும்.
 
இதுதவிர, மாநிலத்தில் மற்ற இடங்களில் 43 கூட்டுறவுக் கடைகள், நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான கடைகளிலும் விற்ட்னை செய்யப்படும்.
 
அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்டுகள்
 
துவரம் பருப்பு விற்பனைக் கடைகள் அனைத்தும் காலை 10 முதல் இரவு 8 வரை செயல்படும். பிற்பகல் 1 முதல் 2.30 வரை உணவு இடைவேளைக்காக மூடப்பட்டிருக்கும்.
 
அரை கிலோ ரூ.55-க்கும், ஒரு கிலோவை ரூ.110-க்கும் பெறலாம்.
 
கடைகளுக்கு பாக்கெட்டுகள் எண்ணிக்கை இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எந்த பாக்கெட்டுகளை அதிகளவு விரும்பி வாங்குகிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மக்களின் தேவை திட்டம் தொடங்கிய ஓரிரு நாள்களில் தெரிந்து விடும் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 





http://www.dinamani.com/tamilnadu/2015/10/31/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86/article3105947.ece

No comments:

Post a Comment