Friday, December 25, 2015

டிசம்பர் 30-இல் வேளாண் குறைகேட்புக் கூட்டம்


ஈரோடு மாவட்டத்தில் வேளாண் குறைகேட்புக் கூட்டம் டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்ட வேளாண் குறைகேட்புக் கூட்டம் காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் காலை 11 முதல் 11.30 மணி வரை விவசாயிகள் மனு கொடுக்கலாம். 11.30 முதல் 12.30 மணி வரை வேளாண் தொடர்பான தங்களது பகுதி பிரச்னை குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment