Tuesday, April 12, 2016

ராசிபுரத்தில் 856 பருத்தி மூட்டை ரூ.14 லட்சத்துக்கு ஏலம்

ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நாமகிரிப்பேட்டை, புதுப்பாளையம், ஜேடர்பாளையம், பாச்சல், கல்யாணி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. ஆர்.சி.ஹெச்., டி.சி.ஹெச்., சுரபி போன்ற ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவைகள் விற்பனைக்காக, ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ்., குடோனுக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் ஏலத்துக்கு கொண்டு வந்து குவிக்கப்படும்.

அவ்வாறு நேற்று நடந்த ஏலத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து 856 மூட்டை பருத்தி  ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இவை தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, ஆர்.சி.ஹெச்., குறைந்தபட்சமாக ரூ.4,552க்கும், அதிகபட்சமாக ரூ.4,886க்கும், டி.சி.ஹெச்., குறைந்தபட்சமாக ரூ.5,029க்கும், அதிகபட்சமாக ரூ.6,339க்கும் ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில், மொத்தம் 856 மூட்டை பருத்தி ரூ.14 லட்சத்துக்கு விற்பனையானது.

source : dinakaran

No comments:

Post a Comment