Wednesday, April 20, 2016

கோடை உழவு அவசியம் விவசாயிகளுக்கு அறிவுரை


நெல் பயிரிடாத விவசாயிகள், கோடை உழவு முறையை மேற்கொண்டு பயன் பெறலாம்' என, வேளாண் துணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
வேளாண் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் பத்மாவதி கூறியதாவது:சொர்ணவாரி பட்டத்தில், பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிரிடுவது இல்லை. நெல் பயிரிட விரும்பாத விவசாயிகள், தங்களின் நிலங்களில், கோடை உழவு முறையை மேற்கொள்ளலாம். இந்த உழவு மூலமாக, இயற்கையாக பல நன்மைகளை பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோடை உழவின் நன்மைகள்
* கோடை உழவு செய்வதால், மழை வரும் போது, நிலத்தில் மழை நீர் தேங்கி நிற்கும்
* புல், பூண்டு ஆகியவை வளர்வது தடுக்கப்படும்
* நிலத்தில் இருக்கும் பூச்சி முட்டைகள் மற்றும் கூட்டுப்புழுக்கள் தடுக்கப்படும்
* இயற்கை மண் வளம் பெருகும்.


source : dinamalar

No comments:

Post a Comment