Monday, May 30, 2016

மாடிகளில் காய்கறி தோட்டம்: தோட்டக்கலைத் துறையினர் அறிவுறுத்தல்

திருவள்ளூர் மாவட்ட மக்கள் தங்களது வீடுகளில் சூழும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்கலாம் என தோட்டக் கலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 ஆண்டுதோறும் பூமியில் சூரிய வெப்பம் அதிகரித்து வருகிறது. வாயுமண்டலமும் மாசடைந்து வருகிறது. இதையடடுத்து அதிகளவில் மரக்கன்றுகளை நட்டுவைத்து பூமியின் உஷ்ணத்தைக் குறைக்கும் வகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில், தலைவர்கள் பிறந்தநாளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
 தற்போது வீடுகளில் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம், அனல் காற்றைத் தடுக்க, வசதியுள்ளவர்கள் தங்கள் வீட்டு மாடிகளில் காய்கறி தோட்டம் அமைக்கலாம் என தோட்டக்கலைத் துறையினர் கூறியுள்ளனர். 

Source : Dinamani

No comments:

Post a Comment