Friday, May 27, 2016

கோடை உழவு செய்தால் மழைநீர் வீணாகாது: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை


கோடை உழவு செய்தால் மழைநீர் வீணாகாமல், நிலத்தில் சேமிக்கலாம் என, வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.

கோடை உழவு செய்வது குறித்து வேளாண் துறை அதிகாரி கூறியதாவது: கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 652.2 மி.மீ., கோடை பருவத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை, 109.5 மி.மீ., ஆனால், 850 மி.மீ., மழை பெய்துள்ளது. மழையை பயன்படுத்தி, கோடை உழவு செய்வதால் மழைநீர் ஓடி வீணாகாமல் அந்த நிலத்திலேயே சேமிக்கப்படுகிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மண்ணிற்குள் இருக்கும் கூட்டு புழுக்கள் அழிக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவ மழை காலத்தில் பெய்கிற மழையை கொண்டு மானாவாரி பயிர்களை சாகுபடி மேற்கொண்டு பயனடைலாம். கோடை உழவுப் பணிக்கு, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வேளாண் பொறியல் துறையில் உழவு இயந்திரம் வாடகையாக மணிக்கு, 340 ரூபாய், மண் தள்ளும் இயந்திரம் மணிக்கு, 840 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் வாடகை தொகையை முன் கூட்டியே செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment