Tuesday, August 9, 2016

உழவர் உற்பத்தி மையம் துவக்கம்

ஒரத்தநாட்டில் உழவர் உற்பத்தி மையம் துவங்கப்பட்டது. ஒரத்தநாட்டில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து, விதைகள், விற்பனை செய்யவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், தேங்காய், கடலை உள்ளிட்ட தானியங்களை விற்பனை செய்யவும், கொள்முதல் செய்யவும், விவசாயிகளுக்கான உற்பத்தி மையம் ஒரத்தநாடு காவல் நிலையம் அருகே திறக்கப்பட்டது. 

விற்பனை கூடத்தை தஞ்சை காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவன மேலாண் இயக்குனர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். ஒரத்தநாடு உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி சுப்பையன் குத்து விளக்கு ஏற்றினார். உற்பத்தியாளர் மையத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதால் அனைத்து விவசாயிகளும் உறுப்பினர்களாக சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Source : Dinakaran

No comments:

Post a Comment