Friday, September 16, 2016

வேளாண் துறையில் மானிய திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு: வேளாண் உதவி இயக்குநர் தகவல்


தாராபுரம் வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பெற பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் எஸ்.எம்.ஞானசேகரன் கூறியதாவது:
தாராபுரம் வட்டாரத்தில் நடப்பு நிதி ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்படும் நெல் விதைகளுக்கு
ரூ.10 மானியம் என்ற அளவில் விநியோகம் செய்ய 17 மெட்ரிக் டன் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நெல் இயந்திரத்தின் மூலம் நடவு செய்வதற்கு ஹெக்டருக்கு ரூ. 5,000 மானியத்தில் 400 ஹெக்டர் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
வரப்பில் பயிர் வகை சாகுபடி செய்ய ஹெக்டருக்கு ரூ. 150 என்ற அளவில் 295 ஹெக்டரும், பயிர் வகை விதைகள் உற்பத்திக்கு கிலோ ரூ. 25 என்ற அளவில் 4 மெட்ரிக் டன்னும், பைப்லைன் விநியோகத்துக்கு ரூ.15 ஆயிரம் எண் மானியத்தில் 7 எண்களும், உயிர் உரங்கள் விநியோகம் செய்ய ஹெக்டருக்கு ரூ.150 என்ற அளவில் 50 ஹெக்டரும், கரும்பில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடிக்கு ஹெக்டருக்கு ரூ.8,000 என்ற அளவில் 50 ஹெக்டருக்கும் கரும்பு பயிரின் இடையில் கரும்புத் தோகை முடக்கு அமைக்க ஹெக்டருக்கு ரூ.2,500 மானியம் என்ற அளவில் 40 ஹெக்டருக்கும், மண்வளத்தை பெருக்க பசுந்தாள் உரவிதைகள் விதைப்பு மேற்கொண்டமைக்கு ஹெக்டருக்கு ரூ.1,500 என்ற அளவில் 100 ஹெக்டேருக்கு இலக்கு பெறப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டஹ்தில் 15 ஆண்டுகளுக்கு உள்பட்ட பயறு வகை ரகங்களும் கிலோ ரூ. 25 என்ற அளவில் 2.3 மெட்ரிக் டன்னும், 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட பயறு வகை ரகங்களுக்கு கிலோ ரூ.25 என்ற அளவில் ஒரு மெட்ரிக் டன்னும், மக்காச்சோள பயிருக்குப்பின் உளுந்து சாகுபடி செய்யப்படும் செயல்விளக்க திடலுக்கு ஹெக்டருக்கு ரூ.10,000 என்ற அளவில் 100 ஹெக்டேரும், விதை தெளிப்பான் விநியோகம் செய்ய ரூ.3,000 என்ற அளவிலும் ரொட்டாவெட்டர் கருவிக்கு ரூ.35,000 என்ற அளவிலும், டிராக்டர், சிறு, குறு ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மானியமும், இதர விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் மானியமும் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.
விதை கிராம திட்டத்தில் நெல் விதை விநியோகம் செய்ய 5 மெட்ரிக் டன்னும், சிறு தானியம் விநியோகம் செய்ய 200 கிலோவும், பயறு வகை விநியோகம் செய்ய 600 கிலோவும், எண்ணெய் வித்துக்கு 4 மெட்ரிக் டன்னுக்கு 1 லட்சம் என்ற அளவில் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இதுதவிர மேலும் பல்வேறு மானிய திட்டத்துக்கு பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
எனவே, பயனாளிகள் உதவி வேளாண்மை அலுவலர்கள் எல்.ரவிக்குமார் 9003587754, பி.கருப்பையா 9363242535, பாலுசாமி 9994778487, தேசிங்குராஜன் 8883728191 ஆகியோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Source : Dinamani

No comments:

Post a Comment