Monday, September 19, 2016

நெல்லிக்கனியை மதிப்புக்கூட்டி பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி

ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், நெல்லிக்கனியை மதிப்புக்கூட்டி பொருள்கள் தயாரிப்பது தொடர்பான ஒருநாள் இலவசப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை, வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் ஜெ. ராம்குமார் தொடக்கி வைத்தார். முனைவர் ச. ஆரோக்கிய மேரி நெல்லிக்கனியிலிருந்து மிட்டாய், ஜூஸ், பாக்கு தயார் செய்வது செயல்முறை விளக்கம் அளித்தார்.

பயிற்சியின்போது, நெல்லிக்கனியின் மகத்துவம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் என்றும் விளக்கப்பட்டது. 

Source : Dinamani

No comments:

Post a Comment