Tuesday, July 25, 2017

மண் பரிசோதனை செய்வது எப்படி: தோட்டக்கலை அலுவலகம் விளக்கம்

மண் பரிசோதனை மூலம் விவசாயம் செய்தால் அதிக மகசூல் பெறலாம். இதற்கு முன் பரிசோதனைக்காக மண்ணை எவ்வாறு சேகரிப்பது என, தோடக்கலை துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். தோட்டக் கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மண் பரிசோதனை மட்டுமின்றி, தண்ணீர் பரிசோதனையும் அவசியமாகும். மண் பரிசோதனை செய்வதற்கு எப்படி மண் சேகரிக்க வேண்டும் என்பது முக்கியமாகும். மண்ணை தொடர்ந்து பயன்படுத்தி அதில் உள்ள பயன்களை அனுபவிக்க வேண்டும் என்றால், மண்ணை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தி, பரிசோதனை முடிவுகளுக்கு ஏற்றவாறு விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும்.

சாகுபடி செய்வதற்கு முன்னர் நாம் சாகுபடி செய்யும் நிலத்தின் மண்ணில் உள்ள சத்துக்கள், குறைபாடு உள்ள சத்துக்கள் எவை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ரசாயன உரங்கள், குப்பை, பூச்சிக்கொல்லி மருந்துகள் இடப்பட்ட இடங்களில் மண் மாதிரிகள் எடுக்க கூடாது.
மேலும் வரப்பு, கிணறு பகுதி, நீர்வடியும் பகுதி மற்றும் நிரந்தரமாக நிழல்படும் இடங்களிலும் மண் மாதிரிகள் எடுக்க கூடாது. நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரி எடுக்கலாம். 'வி' வடிவத்தில் வெட்டி உட்புற மண்ணை எடுக்காமல் இருபக்கமும் சுரண்டி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 4 முதல் 7 இடங்களில் மண் மாதிரி எடுக்கலாம்.



சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை நிழலில் உலர்த்தி அரை கிலோ மண்ணை ஆய்வகத்திற்கு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் மாவட்ட மண் பரிசோதனை மையத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டு, உங்களின் நிலத்தின் தன்மை குறித்த விரிவான தகவல்களை அளிப்பர். அதற்கு ஏற்றவாறு சாகுபடி முறை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தலாம். இதனால் கூடுதல் மகசூல், நோய் தாக்காமல் இருக்கும், என்றார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment